மதுரையில் வீடு அபகரிப்பு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேலின் தம்பி கைது
மதுரை: வீடு அபகரிப்பு வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேலின் தம்பி கைது செய்யப்பட்டார்.
மதுரை கே.கே.நகர் மீனாட்சி தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவரும், அவரது நண்பர் ஜெகதீசனும் இணைந்து ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
அப்போது ஷியாம்சுந்தர் தனது வீட்டை ரூ. 75 லட்சத்துக்கு ஜெகதீசனுக்கு கிரையம் செய்து கொடுத்தார். இந்த வீட்டில் தான் தற்போது ஜெகதீசன் குடியிருக்கிறார்.
முதுகுளத்தூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேலின் தம்பி சக்திவேல் மதுரையில் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஜெகதீசனுக்கு வீடு விற்பனை செய்ததை மறைத்து வேளாண்மை துறை அதிகாரி சக்திவேலுக்கு, ஷியாம் சுந்தர் வீட்டை கிரையம் செய்து கொடுத்தார்.
வீட்டை வாங்கிய சக்திவேல், திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி மூலம் ஜெகதீசனை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளார்.
இது குறித்து ஜெகதீசன் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
ஜெகதீசனை மிரட்டியது தொடர்பாக ஏற்கனவே சிறையில் உள்ள அட்டாக் பாண்டி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது வரை அட்டாக் பாண்டி மீது சுமார் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications