சொத்துக் கணக்கை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தானாக முன் வந்து தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை வெளியிடப்போவதாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் தனது சொத்து விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று மத்திய தகவல் ஆணையம் அவரிடம் தெரிவித்தது. அதற்கு அவர் நம் நாட்டு மக்களுக்கு எனது சொத்து விவரத்தை தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
அதன்படி இன்று தனது சொத்து விவரத்தை வெளியிட்டுள்ளார்.
சொத்து விவரம் வருமாறு,
அமராவதி பகுதியில் ரூ. 39 லட்சம் மதிப்புள்ள வீடு
அமராவதி பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பண்ணை வீடு
ஜல்காவன் பகுதியில் ரூ. 34 லட்சம் மதிப்புள்ள 8 ஏக்கர் நிலம்
பங்குச் சந்தை முதலீடு, நகைகள் என ரூ. 2.5 கோடி சொத்து
கையில் ரூ. 1.9 லட்சம் ரொக்கம்
சொத்து விவரத்தை வெளியிடச் சொன்னாலும் மறுப்பவர்களுக்கு மத்தியில் பிரதீபா பாட்டீல் தானாக முன்வந்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications