ஜாபர்சேட், கருணாநிதியின் முன்னாள் உதவியாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்ட்!

திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்த இவர் ஜெயலலிதா முதல்வரானதும் மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக்கப்பட்டார்.
இந் நிலையில் இவரது சென்னை அண்ணா நகர் 14வது மெயின் ரோடு ஆர் பிளாக்கில் உள்ள வீட்டில் இன்று காலை 8 மணி முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனிபர் ஆகியோர் பெயரில் தியாகராய நகரில் உள்ள லேண்ட் மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடங்களை முறைகேடாக வாங்கி அதில் கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக புகார் தரப்பட்டிருந்தது.
இந்தப் புகாரைத் தந்தவர்,லஞ்ச ஒழிப்புத் துறையில் அலுவலக உதவியாளாராகப் பணியாற்றும் சங்கர். அதன் அடிப்படையில் இந்த சோதனையை போலீசார் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது வீட்டிலிருந்த யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சோதனையையொட்டி அவரது வீட்டின் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஜாபர் சேட்டின் மாமனார் வீட்டில் சோதனை:
அதே போல பெரியகுளத்தில் வசித்து வரும் ஜாபர் சேட்டின் மாமனார் சலீம் வீட்டிலும் ரெய்ட் நடந்தது. சலீ்ம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஜாபர் சேட்டின் நண்பர் ராஜு, தியாகராய நகரைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் நிஜாமுதீன் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அதே போல கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பி.பாண்டியன், கணேசன், வினோதகன், கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், ராஜமாணிக்கத்தின் மகன் துர்காசங்கர் மற்றும் இன்னொரு உதவியாளர் அறிவழகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
மொத்தத்தில் வீடுகள், அலுவலகங்கள் என 10 இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையைத் தொடர்ந்து ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனிபர், கட்டுமான நிறுவன அதிபர் நிஜாமுதீன், துர்காசங்கர் ஆகியோர் மீது வழக்கு 120பி, (கூட்டுசதி), 420 (மோசடி), 109, லஞ்ச ஒழிப்பு பிரிவு 13டி, 132 ஆகிய 5 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர் சேட் கடந்த திமுக ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார். திருச்சி மண்டல ஐ.ஜியாக இருந்த அவர் சென்னையில் உளவுப்பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். பின்னர் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக்கப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் புகார் அனுப்பின. இதையடுத்து அவரை மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.
ஆனால், ஜாபர் சேட் அங்கு பணியாற்ற மறுத்து விடுமுறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இதையடுத்து அதிமுக அரசு அவரை உளவுத்துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இடமாற்றம் செய்தது.
சோதனை நடந்த துர்காசங்கரின் தந்தை ராஜமாணிக்கம் முன்பு செய்தித்துறை செயலாளராக இருந்தார். கடந்த ஆட்சியில் கருணாநிதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீட்டில் வசித்து வருகிறார். இவரும் துர்காசங்கரும் முறைகேடாக பெற்ற வீட்டு மனைகளை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications