உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை அமைக்கும் பணியில் ஈடுபட இந்திய விஞ்ஞானிகளுக்கு ஆஸி.அழைப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பூனேவில் இருக்கும் ஜெயின்ட் மெட்ரோவேவ் ரேடியோ டெலஸ்கோப்பை பயன்படுத்த அடிக்கடி இந்தியா வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை உருவாக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சர் கிம் கார் கூறியதாவது,
ஸ்கொயர் கிலோமீட்டர் அரே என்ற உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப்பை உருவாக்கும் திட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய விஞ்ஞானிகளை அழைக்கிறோம்.
தற்போதுள்ள டெலஸ்கோப்புகளை விட இது 10 ஆயிரம் மடங்கு அதிக செயல் திறன் கொண்டதாக இருக்கும். இது வின்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இந்த திட்டத்திற்கு ஆஸ்திரேலிய அரசு 40.2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்துள்ளன. 2.1 பில்லியன் டாலர் செலவாகும் இந்த டெலஸ்கோப்பை உருவாக்கும் பணியில் உலகின் தலைசிறந்த வி்ஞ்ஞானிகள் ஈடுபடுவர் என்றார்.
600 இந்திய மாணவ-மாணவியர் ஆஸ்திரேலியாவில் பி.ஹெச்.டி படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அரசு இது தொடர்பாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications