கதர் மாலையால் ஷூவைத் துடைத்த ஜெய்ராம் ரமேஷ்: காங்கிரஸ் கண்டனம்

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அம்மாநில காங்கிர்ஸ நிர்வாகிகள் பரிசாக ஒரு கதர் மாலையை கொடுத்தனர். அந்த கதர் மாலை கைராட்டையால் நூற்கப்பட்டது.
அதைப் பெற்றுக் கொண்ட ஜெய்ராம் ரமேஷ் அங்கிருந்த மேஜையில் அதை வைத்தார். பின்னர் அதை எடுத்து தனது ஷூவைத் துடைத்துள்ளார். இதைப் பார்த்த கட்சியினர் கடுப்பாகிவிட்டனர். அவர் மகாத்மா காந்தியடிகளின் கதர் பிரசாரத்தை அவமதித்திவிட்டதாக எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறியதாவது,
நாட்டின் வரலாற்றை உணர்த்தும் சில முக்கிய அடையாளங்கள் உள்ளன, எனவே, ஒவ்வொருவரும் இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications