புளியங்குடி அருகே இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்-சர்ச்சுக்கு தீ வைப்பு
புளியங்குடி: புளியங்குடி அருகே தேவாலயத்திற்கு வந்த இளம் பெண்ணுடன், பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தேவாலயத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
புளியங்குடி அருகே உள்ளது நெல்கட்டும் செவல் பச்சேரி கிராமம். இங்கு சுமார் 250 வீடுகள் உள்ளன. இங்கு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சால்வேஷன் கிறிஸ்தவ ஆலயத்தில் வாரம்தோறும் ஞாயிறன்று நடக்கும் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம்.
அதே போல் அந்த தேவாலயத்தில் நடக்கும் திருமண விழா, ஞானஸ்தான விழா ஆகியவறறிலும் கலந்து கொள்வர். அனைவரையும் போல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகள் பரிமளா தேவியும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தார்.
இதற்கிடையே மூன்று மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பாதிரியார் மோகன்தாஸ் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றார். அப்போது மோகன்தாசுககும், பரிமளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசினர்.
இதையறிந்த மோகன்தாசின் மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மோகன்தாஸ் பரிமளா தேவியுடன் பழகி வந்ததுடன் கண்டித்த மனைவியையும் அடித்து உதைத்தார். இவர்களது கள்ளக்காதல் ஊருக்கு தெரிந்ததால் அவர்களது குடும்பதுத்துக்கு அவமானம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 25-ம் தேதி பரிமளா தேவியுடன், பாதிரியார் மோகன்தாஸ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா தேவியின் தந்தை மதியழகன் தேவாலயத்திற்கு தீ வைத்தார். இதில் ஆலயத்திலிருந்த நாற்காலிகள், திரை மற்றும் பைபிள் உள்ளிட்ட நூல்கள் தீயில் கருகின.
திடீரென்று தேவாலயத்தில் தீ எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் புளியங்குடி டிஎஸ்பி தமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இளம்பெண் பரிமளா தேவியுடன் தலைமறைவான பாதிரியார் மோகன்தாசையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications