லோக்பால் மசோதா: பிரதமருக்கு விலக்கு-ஊழல் செய்து 7 ஆண்டுகளாகி விட்டால் விசாரணை கிடையாது!

மத்திய அமைச்சரவை இன்று கூடி லோக்பால் மசோதாவை பரிசீலித்து அதற்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்த மசோதா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளது மத்திய அரசு.
இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லோக்பால் மசோதா குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் இறுதியில் மசோதாவை ஏற்பது என ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லோக்பால் மசோதாவை மத்திய அமைச்சரவை ஏற்றுள்ளது. இந்த மசோதா திட்டமிட்டபடி மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
லோக்பால் அமைப்பில் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைவராக செயல்படுவார்.
லோக்பால் அமைப்பில் 50 சதவீதம் பேர் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஒருவர் மீது ஊழல் நடந்து 7 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார் கொடுத்தால் லோக்பால் அமைப்பு அதை விசாரிக்காது, ஏற்காது.
பிரதமருக்கு விலக்கு
லோக்பால் வரையறையிலிருந்து பிரதமர், நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
அதேபோல அரசு உயர் அதிகாரிகளுக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பிரதமராக இருப்பவர் மீது ஊழல் புகார் எழுந்தால் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே விசாரிக்க முடியும்.
அனைத்து மாநிலங்களிலும் இதேபோல லோக்பால் மசோதாக்களை தாக்கல் செய்யுமாறு முதல்வர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதவுள்ளார்.
லோக்பால் மசோதாவில் திருத்தம் தேவைப்பட்டால், அதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
அன்னாவின் பரிந்துரைகள் முற்றிலும் நிராகரிப்பு
சமூக சேவகர் அன்னா ஹஸாரே குழுவினர் லோக்பால் மசோதா தொடர்பாக அளித்திருந்த அத்தனை பரிந்துரைகளையும் மத்திய அமைச்சரவை தூக்கி குப்பையில் போட்டு விட்டதையே இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.
இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications