விழுப்புரத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாணவர் இறந்ததற்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களைத் தடியால் அடித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. எஸ்.கனகராஜ், மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
மாணவர் பிரபாகரன் விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் படிப்பு படித்து வந்தார்.
இவர் கடந்த புதன்கிழமை அன்று வகுப்பில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காததால் குணசேகரன் என்ற ஆசிரியர் அவரை கடுமையாக அடித்துள்ளார். இதில் மாணவர் பிரபாகரன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக வாகனத்தில் ஏற்றும்போது பரிதாபமாக உயிர் இழந்தார்.
தகவல் அறிந்ததும் சக மாணவர்கள், மாணவரின் இறப்புக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர் பிரபாகரன் மரணத்திற்கு காரணமான குணசேகரனை கைது செய்யாமல் ஜனநாயக ரீதியாக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
எனவே, தமிழக அரசு இறந்த மாணவர் பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதுடன், ஆசிரியர் குணசேகரன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications