பதவி பறிபோவது உறுதியானதால் சட்டசபையைக் கலைக்க திட்டமிட்ட எதியூரப்பா!

இன்று காலை தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் எதியூரப்பா. ஆனால் இதற்கு கட்சி மேலிடம் தடை விதித்திருந்தது. மேலும் அவரது கூட்டத்தில் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவையும் மீறி எதியூரப்பா இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை பெங்களூரில் கூட்டினார். அதில், 7 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி, ஒரு எம்எல்சி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதனால் கட்சியின் அனைத்து லிங்காயத்து இன எம்எல்ஏக்களும் தன்னுடன் தான் உள்ளனர் என்று கூறி வந்த எதியூரப்பாவுக்கு அவரது ஜாதி எம்எல்ஏக்களே முழு அளவில் ஆதரவாக இல்லை என்பது உறுதியானது. இதை எதியூரப்பா எதிர்பார்க்கவில்லை.
தனது பதவி பறிபோவது உறுதியானதால், வேறு யாரும் பதவிக்கு வந்துவிடாமல் தடுக்க, சட்டசபையைக் கலைக்க எதியூரப்பா பரிந்துரை செய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இன்று காலை அவர் நடத்திய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அது குறித்தும் எதியூரப்பா பேசியதாகத் தெரிகிறது. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்கள் மட்டத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு நிலவியதால் அதையும் செயல்படுத்த முடியாமல் போனார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications