பதவி பறிபோவது உறுதியானதால் சட்டசபையைக் கலைக்க திட்டமிட்ட எதியூரப்பா!

Subscribe to Oneindia Tamil

Yeddyurappa
பெங்களூர்: கர்நாடக சுரங்க ஊழல் குறித்த லோக் ஆயுக்தா அறிக்கை மீதான பாஜக முக்கியத் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு பெங்களூர் திரும்பிய எதியூரப்பாவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள், குறிப்பாக அவர் தீவிரமாக நம்பியிருந்த பலரும் கைவிட்டதால்தான் ராஜினாமா முடிவை எடுக்க நேரிட்டது.

இன்று காலை தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார் எதியூரப்பா. ஆனால் இதற்கு கட்சி மேலிடம் தடை விதித்திருந்தது. மேலும் அவரது கூட்டத்தில் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவையும் மீறி எதியூரப்பா இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை பெங்களூரில் கூட்டினார். அதில், 7 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள், ஒரு எம்பி, ஒரு எம்எல்சி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதனால் கட்சியின் அனைத்து லிங்காயத்து இன எம்எல்ஏக்களும் தன்னுடன் தான் உள்ளனர் என்று கூறி வந்த எதியூரப்பாவுக்கு அவரது ஜாதி எம்எல்ஏக்களே முழு அளவில் ஆதரவாக இல்லை என்பது உறுதியானது. இதை எதியூரப்பா எதிர்பார்க்கவில்லை.

தனது பதவி பறிபோவது உறுதியானதால், வேறு யாரும் பதவிக்கு வந்துவிடாமல் தடுக்க, சட்டசபையைக் கலைக்க எதியூரப்பா பரிந்துரை செய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இன்று காலை அவர் நடத்திய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அது குறித்தும் எதியூரப்பா பேசியதாகத் தெரிகிறது. ஆனால் கட்சி எம்.எல்.ஏக்கள் மட்டத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு நிலவியதால் அதையும் செயல்படுத்த முடியாமல் போனார் எதியூரப்பா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+