பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை கணக்கிட 2 குழுக்கள் நியமனம்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இருந்த 5 ரகசிய அறைகளை திறந்து ஆய்வு நடத்திய போது, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான அதிகளவிலான பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்து வெளிச்சத்திற்கு வந்தன.
இவற்றை கணக்கிட தேசிய அருங்காட்சியக இயக்குனர் சி.வி. ஆனந்தபோஸ் தலைமையில், தொல்பொருள் துறை அதிகாரி ராஜா, கோயில் நிர்வாக அதிகாரி ஹரிகுமார், ரிசர்வ் வங்கி அதிகாரி விகாஸ் சர்மா, தேசிய தொல்பொருள் துறை தலைவர் வேலாயுத நாயர் ஆகியோர் அடங்கிய 5 குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
நீதிபதி கிருஷ்ணன், கேரள கூடுதல் தலைமை செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
நாளை இந்த இரு குழுக்களும் திருவனந்தபுரம் வந்து, பொக்கிஷங்களை தரம் பிரிப்பது, அவற்றை மதிப்பிடுவது, 'பி' அறையை திறக்கும் முறை ஆகிய குறித்து, கோயில் நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இரு குழுக்களும் ஆலோசனை நடத்துகிறது. அதன்பின், ரகசிய அறைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறின.












Click it and Unblock the Notifications