2ஜி விவகாரத்தில் ராசா மூலம் காங்கிரஸ் கட்சியை மிரட்டுகிறது திமுக- விஜயகாந்த்
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது முன்னாள் அமைச்சர் ராசா கூறியுள்ள புகார்கள், காங்கிரஸ் கட்சிக்கு திமுக விடுத்துள்ள மிரட்டலாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த் தனது கேப்டன் டிவி மூலம் அவ்வப்போது மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆரம்பித்துள்ளார். இமெயில்கள் மூலம் கேள்விகளை வாங்கி அதற்குப் பதிலளிக்கிறார் விஜயகாந்த்.
அப்படி ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் மீது ஆ.ராசா குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்காக திமுக செய்த செயலாகும் என்றார் விஜயகாந்த்.
நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு முன்பு உள்ள நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுகிறார். அவர் ஆட்சியின் போது விசாரித்திருக்க வேண்டியது தானே, ஏன் விசாரிக்கவில்லை?திமுகவில் உள்ள நிர்வாகிகள் நில அபகரிப்பு வழக்கில் தற்போது ஜெயிலில் இருப்பதால் அக்கட்சி போராட்டத்திற்கு ஆட்கள் இல்லாமல் மாணவர்களை அழைக்கின்றனர் என்றார்.
விஜயகாந்த் வென்ற ரிஷிவந்தியம் தொகுதி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரிஷிவந்தியம் தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் விரைவில் செய்து தரப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications