கலக்கத்தில் விஜய்.. தவெக செய்யும் மிஸ்டேக்! பிரச்சனையை கிளப்ப ரெடியாகும் கூட்டணி கட்சிகள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் உதவியுடன்தான் தற்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிறது. இப்படி இருக்கையில், தூய்மை பணியாளர்கள் விஷயத்தில், கடந்த திமுக ஆட்சியில் நடந்த அதே தவறை தவெக அரசும் செய்ய ரெடியாகி வருவதால், கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு குரலை எழுப்ப தொடங்கியிருக்கின்றன. ஆட்சி அமைந்து இன்னும் 3 மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில், கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பு, முதலமைச்சர் விஜய்க்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர். அவர்களது கோரிக்கை ரொம்பவும் நியாயமானது. ஊரில் உள்ள குப்பைகளையெல்லாம் உயிரை பணயம் வைத்து அள்ளுகிறோம். ஆனால், போதுமான ஊதியமும், பணி பாதுகாப்பும் எங்களுக்கு இல்லை. எனவே, தூய்மை பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

திமுகவின் மிஸ்டேக்
அப்போதைய திமுக அரசு இதை அசால்ட்டாக கையாண்டது. அதேநேரம், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய விஜய், தவெக அரசு அமைந்தால்.. உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார்.
தவெகவின் தவறு
இப்போது தவெக அரசுதான் அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால், என்ன செய்கிறது? தமிழகம் முழுவதும் 12 மாநகராட்சியில் தூய்மைப்பணியை தனியாருக்கு ஒப்படைக்க ஆய்வு செய்வதற்காக ஒப்பந்த புள்ளியை கோரியுள்ளது. இது தூய்மை பணியை தனியாருக்கு விடுவதற்கான முதல்கட்ட பணிகள் என்று தவெக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) கட்சிகள் விமர்சித்துள்ளன. உடனடியாக இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கூட்டணி கட்சிகள்
இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் தவெக அரசு நடக்காது. இப்போது இருக்கும் சூழலில், இன்னொரு இடைத்தேர்தல் வந்து, அதில் தவெக வேட்பாளர்கள் ஜெயித்தால்தான் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும். அதுவரை, இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு அவசியம். இதில் மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் தவெக இடம் கொடுத்திருக்கிறது. இடதுசாரிகள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெறாமல் தனியாக நின்றிருக்கின்றனர்.
அப்செட் ஆன விஜய்
எனவே, இந்த கோரிக்கையை வைத்து எப்போது வேண்டுமானாலும் பஞ்சாயத்தை இடதுசாரிகள் கிளப்பலாம். இதுதான் விஜய்யை ரொம்பவும் அப்செட் ஆக்கியிருக்கிறது.
இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாததால், எப்படியாவது அதுவரை ஆட்சியை சமாளித்து ஒட்டிவிட வேண்டும் என்று விஜய் கவனமாக இருக்கிறார். இந்த நேரத்தில், தூய்மை பணியாளர்கள் பிரச்சனையால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுவதை அவர் கொஞ்சம் கூட விரும்பவில்லை. எனவே இந்த விஷயம் குறித்து மீண்டும் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்வார் என்ற சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications