பத்மநாப சுவாமி கோவில் அருகே கடை தீப்பிடித்ததில் மர்மம்- விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் தீப்பிடித்தது சதி வேலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டத்தில் மர்மம் உள்ளதாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் கிழக்கு வாசல் அருகே கைவினைப் பொருட்கள் விற்கும் கடையில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது. வாடகை பிரச்சனை காரணமாக இந்த கடை கடந்த 3 மாதமாக பூட்டப்பட்டிருந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரிதமாக செயல்பட்டதால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
பத்மநாப சுவாமி கோவில் அருகே நடந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என முதலில் போலீசார் தெரிவித்தனர். ஆனால் மின் வாரிய அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் அந்த கடைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தெரிய வந்தது.
மேலும் ஜெனரேட்டர் மூலமே கடைக்கு மின்சாரம் வழங்கப்பட்டதும் கடை மூடப்பட்ட பின் ஜெனரேட்டரும் இயக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் கடையில் தீவிபத்து ஏற்பட்டது எப்படி என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் பிரான்சிஸ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications