ஜன்னல் கம்பிகளுக்கிடையே தலை சிக்கி 4 வயது சிறுமி பலி
மதுரை: ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை சிக்கி 4 வயது சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தாள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித் தொழிலாளி. அவருடை மனைவி பஞ்சவர்ணம். அவர்களுடைய மகள் வைத்தீசுவரி (4). அங்கன்வாடிக்குச் சென்று வந்தாள்.
நேற்று காலையில் வழக்கம் போல் வைத்தீசுவரி அங்கன்வாடிக்கு சென்றாள். அங்கு ஜன்னல் அருகே இருந்த ஸ்டூலில் எறி வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீர் என்று தலையை கம்பிகளுக்கு இடையே நுழைத்தாள். ஆனால் திரும்பி தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
தலை சிக்கியதால் வைத்தீசுவரி வலியால் அலறத் தொடங்கினாள். உடனே அங்கிருந்த அங்கன்வாடி ஊழியர் சுந்தரம்மாள் சிறுமியின் தலையை கம்பிகளில் இருந்து வெளியே எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. இதையடுத்து மற்றொரு பெண்ணின் துணையோடு மெதுவாக சிறுமியின் தலையை வெளியே எடுத்தார்.
ஆனால் சிறுமிக்கு மூச்சி திணறல் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயந்த அவர்கள் சிறுமியை சோழவந்தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications