கேரள மாணவி பலாத்கார வழக்கு: மலையாள சினிமா இயக்குனர் உள்பட 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாணவி பலாத்கார வழக்கில் மலையாள திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூரைச் சேர்ந்த பள்ளி மாணவி 100-க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் இது வரை 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைமறைவாக உள்ள குமரி இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்பட 25-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்த மலையாள திரைப்பட இயக்குனர் ஜெஸ்பால், நடிகர் பிரஜீத், தயாரிப்பு நிர்வாகி இஸ்மாயில் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஜெஸ்பால் சமீபத்தில் வெளியான சேவர்படா என்ற படத்தை இயக்கியவர்.

பிரஜீத் ஏராளமான டிவி தொடர்களில், திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர்கள் 3 பேரும் சிறுமியை எர்ணாகுளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+