வீடு அபகரிப்புப் புகார் எதிரொலி- மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் தலைமறைவு

சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்குச் சொந்தமான வீட்டை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜே.அன்பழகன், மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அபகரித்து விட்டதாகவும் அதை மீட்டுத் தருமாறும் கோரியிருந்தார்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தனிப்படை போலீஸாரும் மதுரை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. மன்னன் இன்று கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து தற்போது மன்னன் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
மு.க.அழகிரியைச் சுற்றி இருந்த கூட்டாளிகள் வட்டாரத்தில் கடைசியாக மிஞ்சியிருந்தவர் மன்னன் மட்டுமே. மற்ற அனைவருமே கைது செய்யப்பட்டு உள்ளே போய் விட்டனர். மன்னனையும் போலீஸார் கைது செய்ய கிளம்பிவிட்டதால் மதுரை திமுக வட்டாரம் குறிப்பாக அழகிரி வட்டாரம் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸாரின் அடுத்த குறி யாராக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் மதுரையில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications