சர்தாரி இருக்கும் வரை பிழைப்பில்லை: வேறு வேலை தேடும் பாக். தூக்கிலிடும் ஊழியர்

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் சபீர் மாசிஹ் (27). இவர் ஒரு கிறிஸ்தவர். அவர் லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் தூக்கு தண்டனைக் கைதிகளைத் தூக்கில் இடுபவர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணியில் தான் இருக்கிறார். முதல் 3 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்டோரை தூக்கிலிட்டுள்ளார். அவரது மூதாதையர்களும் இதே பணியைத் தான் செய்துள்ளனர்.
ஆசிப் அலி சர்தாரி தூக்கு தண்டனையை விரும்பாததால் கடந்த 2 ஆண்டுகளாக யாரும் தூக்கிலிடப்படவில்லை.
இது குறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
நான் வேறு வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆசிப் அலி சர்தாரி அதிபராக இருக்கும் வரையில் யாரையும் தூக்கிலிட அனுமிதக்கமாட்டார். எனது பாட்டனாரின் சகோதரர் தாரா மாசிஹ். அவர் தான் ஜுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டவர்.
கடந்த 2 ஆண்டுகளாக தற்போது யாரையுமே தூக்கிலிடாததால் நான் பெயருக்கு தான் வேலைக்கு சென்று வருகிறேன்.
நான் முதன்முதலாக ஒருவரை தூக்கிலிடும்போது பயந்தேன். ஆனால் சிறை கண்காணிப்பாளர் எனக்கு தைரியமளித்தார். கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது நியாயம் தான்.
நான் பைபிள் கூறுவதை நம்புபவன். குர்ஆனைப் போன்று பைபிளிலும் பழிக்கு பழி என்று உள்ளது. எனவே, கொலை செய்தவர்கள் வாழத் தகுதியில்லாதவர்கள்.
எனக்கு மாத ஊதியம் ரூ. 10 ஆயிரம். ஒருவரை தூக்கிலிட்டால் ரூ. 20 கிடைக்கும்.
தூக்கு மேடைக்கு வருபவர்களில் சிலர் அழுவார்கள், சிலர் பிரார்த்தனை செய்வார்கள். ஆனால் 2 சகோதரர்கள் மட்டும் பாடிக் கொண்டே வந்தனர். இறந்தவரின் குடும்பத்தாரிடம் அவர்களை மன்னிப்புக் கேட்குமாறு கூறியதற்கு பாடினார்கள். நாங்கள் தவறு செய்தோம். சரியாகத் தான் தண்டனை விதித்துள்ளனர் என்றார்கள்.
சிலர் நான் கிறிஸ்தவன் என்பதால் என்னை மாற்றிவி்ட்டு ஒரு முஸ்லீமை பணியமர்த்துமாறு கூறினார்கள். பர்வேஸ் முஷாரப் பதவிக்காலத்தில் ஏராளமானோர் தூக்கிலிடப்பட்டனர்.
பைசலாபாத்தில் உள்ள மாவட்ட சிறையில் நான் ஒரே நாளில் 5 பேரைத் தூக்கிலிட்டேன் என்றார்.
பாகிஸ்தானில் 27 குற்றங்களுக்கு தண்டனை தூக்கு தான்.












Click it and Unblock the Notifications