6ம் தேதி தீரன் சின்னமலை வீரவணக்க நாள் விழா- கரூரில் சீமான் பங்கேற்பு
கரூர்: சுதந்திரப் பேராட்ட வீரர் தீரன் சின்னமலை வீரவணக்க நாள் விழா பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகின்றார்.
கரூரில் வரும் 6ம் தேதி தீரன் சின்னமலை வீரவணக்க நாள் விழா நடக்க உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு மணிக்கு லைட்ஹவுஸ் கார்னரில் தந்தை பெரியார் சிலைக்கும், ஜஹர் பஜாரில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பின் 80 அடி சாலையில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இறுதியாக, நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச உள்ளார். இந்த விழாவில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, கலைக்கோட்டுதயம், திலீபன், ஜெயசீலன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
விழா ஏற்பாடுகளை, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடை, சேலம், நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கினைத்து நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications