மண்டபம் அருகே மூத்த அதிமுக நிர்வாகி படுகொலை: ராமநாதபுரத்தில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே மூத்த அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த செல்லையா சேர்வை மகன் சாத்வீகசீலன்(40). மூத்த அதிமுக நிர்வாகி. ரகுநாதபுரத்தில் பெட்ரோல் பம்ப் வைத்து நடத்தி வந்தார். நேற்றிரவு அவர் மண்டபம் அருகே உள்ள கும்பரம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர் அருகில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
சாத்வீகசீலன் நேற்றிரவு பெட்ரோல் பம்பை மூடிவிட்டு ரூ. 65 ஆயிரம் ரொக்கத்துடன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே மர்ம நபர்கள் அவரைக் கொன்றுவிட்டனர்.
இந்த கொலையின் நோக்கம் இன்னும் தெரியவில்லை. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications