தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகனுக்கு பிடிவாரண்ட்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலின் மகன் ரத்தினவேலுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சேலம், அழகாபுரம், காட்டூரை சேர்ந்தவர் ஏழுமலை(45). பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருபவர். இவரிடம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலின் மகன் ரத்தினவேல் 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பணத்தை திரும்ப வழங்க, ரத்தினவேல் காசோலை வழங்கியுள்ளார்.

ஆனால், காசோலை வங்கியில் செலுத்திய போது, ரத்தினவேலு கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்தது. இது குறித்து, ஏழுமலை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற எண் 5ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் சரத்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது , விசாரணைக்கு ரத்தினவேல் ஆஜராகவில்லை. இதனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேலின் மகன் ரத்தினவேலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால் ரத்தினவேல் கைது ஆகும் வாய்ப்பு உள்ளதாக போலீஸ் வட்டராத்தில் கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+