மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்ததைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை : திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்ததைக் கண்டித்து சட்டசபையிலிருந்து இன்று திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியது. அப்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார்.
அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக எழுந்து கூச்சலிட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களை அமருமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இருப்பினும் ஏதோ பேசியபடி வெளிநடப்புச் செய்வதாக அவர்கள் அறிவிது விட்டு வெளியேறினர்.
திமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு ரத்து செய்துள்ளதைக் கண்டித்தும், திமுகவினர் மீதான அதிமுக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையைக் கண்டித்தும் வெளிநடப்புச் செய்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications