பொய் வழக்கு போட்டவர்கள் ஆட்சி நீடித்ததாக சரித்திரம் இல்லை: துரைமுருகன் காட்டம்
கோவை: பொய் வழக்கு போட்டவர்களின் ஆட்சி நீடித்ததாக அல்ல, அழிந்ததாக மட்டுமே வரலாறில் உள்ளது என, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அ.தி.மு.க., அரசை சபித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காண, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பழனிச்சாமி, சென்னை மேயர் சுப்ரமணியன், பட்டிமன்ற புகழ் திண்டுக்கல் லியோனி, வீரபாண்டி ஆறுமுகம் மனைவி, மகன் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு வந்தனர்.
சந்திப்பிற்கு பின் சிறையை விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, அ.தி.மு.க., அரசு பொய் வழக்கில் தி.மு.க.,வினரை கைது செய்து
சிறையில் அடைத்துள்ளது. இவர்களுக்கென தனி சலுகை எதுவும் வழங்கவில்லை. சிறை விதிக்குட்பட்டு, சிறை அதிகாரிகள் சில சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
தி.மு.க -வினர் மீது பொய் வழக்கு போடவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். இதை போலீஸ் அதிகாரிகள் கூறக்கூடாது. வழக்கு உண்மையா, அல்லது பொய்யா என கோர்ட் தான் தீர்மானிக்கும். இந்த வழக்குகளை தி.மு.க. சட்டப்படி சந்திக்கும். பொய் வழக்கு போட்டவர்களின் ஆட்சி நீடித்ததாக சரித்திரம் இல்லை. அழிந்ததாகத் தான் வரலாறு கூறுகிறது. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications