வடிவேலு மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன்: சிங்கமுத்து

காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார். இரும்புலியூர் பகுதியில் ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிங்க முத்து மூலம் வடிவேலு வாங்கி உள்ளார் என்று புகார் தெரிவித்துள்ளார்.
தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று வடிவேலு கூறியுள்ளார். அது மட்டுமின்றி சிங்கமுத்து மீது மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த சிங்கமுத்து கூறியதாவது,
வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார்.
பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது.
அவர் தான் அந்த நில உரிமையாளர் வீட்டுக்கு தினமும் சென்று பேசி குறைந்த விலைக்கு வாங்கினார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்க வடிவேலு முயற்சிக்கிறார்.
அவர் ஒன்றும் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தரவில்லை. நானும், முருகேசன் என்பவரும் தான் அவருக்காக ஒவ்வொரு படக் கம்பெனினுக்கும் நடையாய் நடந்தோம். தற்போது என்னை பொய் வழக்கில் மாட்டிவிட பார்க்கிறார். அவர் மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications