For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் செப். 14ம் தேதி வரை நடைபெறும்- சபாநாயகர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் முடிவடைந்ததும், சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சட்டசபைக் கூட்டத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

8ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெறும் என்றார்.

திமுகவினருக்கு இருக்கைகள் சரியாக ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே என்று செய்தியாளர்கள் சபாநாயகரிடம் கேட்டபோது, பேரவை விதிப்படிதான் அனைவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக உறுப்பினர்களுக்கும் அவ்வாறே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

English summary
TN assembly's budget session will be held till September 14, said Speaker Jayakumar. He also said, the debate on the budget will begin from August 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X