100 சவரன் நகையுடன் புதுப்பெண் ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழிஞ்சாம்பாறை: திருமணம் முடிந்த 3 நாளில், 100 சவரன் நகையுடன் ஓட்டம் பிடித்த புதுப் பெண்ணை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.

கேளர மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டியை சேர்ந்தவர் செபீக். கடந்த மூன்று நாட்களுக்கு முன், இவருக்கும் ஷீபா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 3 நாட்கள் கடந்த நிலையில், ஷீபா திடீரென மாயாமானார். அவர் அணிந்திருந்த 100 சவரன் நகைகளும் காணாமல் போனது.

உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் ஷீபாவை குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், செபீக் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறி்த்து வழக்கு பதிந்த போலீசார், ஷீபாவின் மொபைல்போன் எண்ணை வைத்து, விசாரித்தனர்.

இதில், அந்த எண் சூரத்தில் உள்ளது தெரிந்தது. அங்கு சென்று விசாரித்த போது, ஷீபா தன் காதலன் ஜேம்ஸ் உடன் இருப்பது தெரிந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கோட்டயத்தில் படித்த போது, ஜேம்ஸ்-ஷீபா இடையே பழக்கம் ஏற்பட்டது. பின் இருவரும் காதலர்களாகி உள்ளனர். இந்நிலையில், திருமணம் முடிந்த பின்னும் காதலன் ஜேம்ஸ்சை மறக்க முடியாமல் தவித்த ஷீபா, 3 நாட்களுக்கு பிறகு நகைகளுடன் சூரத்திற்கு சென்றது தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+