சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து ஜெகன் கட்சியை அழிக்க காங். சதி: ரோஜா குற்றச்சாட்டு

நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர் நகரியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது,
ஆந்திர மக்கள் ஜெகன் மோகன் ரெட்டி தான் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆந்திர சட்டசபைக்கு எப்பொழுது தேர்தல் நடந்தாலும் ஜெகன்மோகன் தான் முதல்வர் ஆவார். அதனால் தான் அவர் மீது வேண்டும் என்றே சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து அவரது கட்சியையே அழித்துவிட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டியுள்ளது.
இந்த சதியை ஜெகன்மோகன் எளிதில் முறியடித்துவிடுவார். ராஜசேகர ரெட்டி பரம்பரை பணக்காரர். அவர் முதல்வர் ஆகும் முன்பே கோடீஸ்வரன். அந்த பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து தான் தனது மகன் ஜெகனுக்கு சொத்து சேர்த்தார். அதற்கெல்லாம் முறைப்படி கணக்கு வைத்துள்ளார்.
ஜெகனின் பெயரைக் கெடுக்கவே சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் ஆந்திர மக்கள் மனதில் இருந்து ஜெகனை அகற்றவே முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications