யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
விழுப்புரம்: யு.கே.ஜி., மாணவியிடம் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டு சித்திரவதை செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியைகள் நால்வர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார். அதே பள்ளியின் ஆசிரியை ஜிலோபோர்ஜியா, முதல்வர் லேஸிபோஸ்கோ உள்ளிட்ட 4 ஆசிரியைகள் சேர்ந்து, சிறுமியை ஒரு தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வெளியில் யாரிடமாவது கூறினால், பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்து விடுவோம் என சிறுமியை ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் நடந்த சம்பவங்களை சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி கூறியவற்றை வைத்து, ஆசிரியைகள் மீது ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் என 10 பேர் எம்.ஆர்.என்.நகரில் வசிக்கும் ஆசிரியை ஜிலோபோர்ஜியா வீட்டிற்கு சென்று அவரைத் அடித்து உதைத்தனர். இதுகுறித்து, இருத்தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications