யாருடையாவது உள்பாவாடை காணாமல் போன கூட கேஸ் போடுவார்கள் போல-கே.என்.நேரு பேச்சு
திருவாரூர் : சினிமாவில் உள் பாவாடை காணாமல் போன கூட என் மீது கேஸ் போடுவார்கள் என்று வசனம் வரும். அதுபோல தற்போது தமிழகத்தில் நடக்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.
திருவாரூரில் நடந்த திமுக கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேருவும் பேசினார். இவர் மீதும் ஏகப்பட்ட புகார்கள், வழக்குகள் அணிவகுத்து நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் காஞ்சனா அபகரிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் நேரு. இதில் இவரைக் கைது செய்ய போலீஸார் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் திருவாரூர் கூட்டத்தில் கலந்து கொண்டு 'உள் பாவாடை' வசனம் பேசியுள்ளார் நேரு. அவரது பேச்சு:
அதிமுக அரசு போடப்படுகின்ற வழக்குகளில் முதன் முதலில் ஆரம்பித்தது திருச்சியில்தான். நீதிமன்றங்களில் தீர்ப்பு உங்களுக்கு எதிராகவும், எங்களுக்கு சாதகமாகவும் வரும் காலம் வரும்.
சினிமாவில், உள்பாவாடை காணாமல் போய்விட்டால் கூட எங்கள் மீது கேஸ் போடுகிறான் என்று சொல்லுவார்கள். அது மாதிரி உண்மை நிரூபிக்கப்படாமல் யார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்தி வழக்கு போடுகிறார்கள். அதனால்தான், இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? இதுதான் வேலையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.
திமுக அரசை நசுக்க பார்க்கிறீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு எங்களை நசுக்குகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு பந்து போல எழுந்திருப்பான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன் என்றார் நேரு.












Click it and Unblock the Notifications