சீனாவின் கிழக்குக் கடற்கரையை இன்று தாக்குகிறது முய்பா புயல்-2 லட்சம் பேர் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

ஷிஜியங்: முய்பா புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை இன்றுதாக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இந்தாண்டின் 9 புயல் என அறிவிக்கப்பட்டுள்ள முய்பா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சீனாவின் கிழக்கு மாகாணமான ஷிஜியங்கில் அதிக சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீனவர் யாரும் கடலுக்கு செல்லவில்லை. கடற்கரை பகுதிகளில், மணிக்கு 162 கி.மீ., வேகத்தில் வரும் புயல் 10-15 கி.மீ வேகத்தில் கரையை நெருங்கி கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

புயலின் தாக்கத்தில் சீனாவின் மற்ற பகுதிகளில் கன மழையும் பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கத்தை குறைக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஷிஜியங் மாகாணத்தின் கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

மேலும் கடற்கரை பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் குயின்ஷான் அணுமின் நிலையம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 4,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. புயலில் பாதிக்கப்படும் பகுதிகளில் உடனடி நிவாரண உதவிகள் வழங்க, சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+