கோவை: யானை தாக்கி வன ஊழியர் பலி; மற்றொருவர் கவலைக்கிடம்
கோவை: காட்டு யானை தூக்கி எறிந்த ரோந்து சென்ற வன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றோருவர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கேரள-தமிழக எல்லைகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகம்.அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து விடும் யானைகள் சேட்டையில் ஈடுபடும். நேற்று இரவு வாளையாரை அடுத்த சோளக்காடு பகுதியில் திருவள்ளுரை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வன ஊழியர் நடேசன்(54) மற்றும் நெல்லையை சேர்ந்த வன பாதுகாவலர் சந்திரசேகரன்(50) கியோர் ரோந்து பகுதியில் ஈடுபட்டனர்.
முடமாத்தி என்ற அடர்ந்த காட்டு பகுதிக்கு வந்த போது, எதிரே ஆவேசமாக வந்த யானை இவரையும் துரத்த ஆரம்பித்தது. பயத்தில் ஓடிய நடேசனை சிறிது நேரத்திற்குள் தடுமாறி கீழே விழுந்தார். அவர் எழுந்திருப்பதற்குள் அங்கு வந்த யானை தூதிக்கையால் தூக்கி ஏறிந்தது. இதில் நடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதன்பின் சந்திரசேகரை துரத்திய யானை, அவரையும் தூக்கி ஏறிந்துவிட்டு, காட்டுக்குள் ஓடிவிட்டது. சந்திரசேகரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். காட்டு யானை மிதித்து, வன ஊழியர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications