சிரியா போராட்டம்: தூதரை திரும்பப் பெற்ற செளதி அரேபியா
டமாஸ்கஸ்: சிரியாவில் ராணுவம் 50-க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றதையடுத்து செளதி அரேபியா தனது தூதரைத் திரும்பப் பெற்றுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆஷாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்நாட்டு ராணுவம் போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வருகிறது. ராணுவம் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் உயிர் இழந்து வருகின்றனர்.
இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்ததையடுத்து, சிரியாவுக்கான தூதரை செளதி அரேபியா திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து செளதி மன்னர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
செளதி அரேபியா தனது தூதரை திரும்பப் பெறுகிறது. சிரியாவில் மக்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும். சிரியாவில் நடப்பவற்றை செளதி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அங்கு சமாதானம் செய்யப்பட்டு, சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிரியாவுக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று தானாக முன்வந்து சமாதானம் செய்வது இல்லையென்றால் அழிவது. இரண்டாவது வழி ஏற்படாமல் இருக்க ஆண்டவன் அருள்புரிவானாக.
அங்கு நடக்கும் போராட்டம் இஸ்லாமிய போதனைகளை மீறுவதாகும். ஏராளமானவர்கள் இறந்துள்ளனர், பலர் ரத்தம் சிந்தியுள்ளனர், அடைந்துள்ளனர். இது மத போதனைகளுக்கு நேர்மாறானதாகும் என்றார்.
சிரியாவில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் விசித்திரமானது, வியக்கத்தக்கது என்று டமாஸ்கஸிற்கான அமெரிக்க தூதர் ராபர்ட் போர்ட் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications