ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம்: தயாநிதி மாறனிடம் சிபிஐ விரைவில் விசாரணை

ஏர்செல் நிறுவனத்துக்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தபோது அதைத் தராமல் காலதாமதம் செய்த தயாநிதி மாறன், பின்னர் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்ற பின்னர் அதற்கு 14 மண்டலங்களில் லைசென்ஸ் ஒதுக்கித் தந்தார் என்றும் சிவசங்கரன் கூறியுள்ளார்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், மேக்சிஸ் நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் சேவையில் பல நூறு கோடி முதலீடு செய்திருப்பது தெரியவந்தது.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுடன் ஒத்துழைக்குமாறு மேக்ஸிஸ் நிறுவனத்திடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு சிபிஐ விரைவில் கடிதம் அனுப்பவுள்ளது.
இதை ஏற்று மேக்ஸிஸ் ஒத்துழைப்பு தராவிட்டால், அந்த நிறுவனம் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிகிறது.
அதே போல தயாநிதி மாறனிடமும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விரைவிலேயே விசாரணையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக சிவசங்கரன் கூறிய புகார்களுக்கு தயாநிதி மாறனிடம் சிபிஐ விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவர் விரைவிலேயே சிபிஐ முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்படுவார் என்று தெரிகிறது.
சஞ்சய், வினோத் ஜாமீன் மனுக்கள்-பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு:
இந் நிலையில் 2ஜி ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள யுனிடெக் வயர்லெஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா மற்றும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த மனுக்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எச்.எல்.டாட்டூ ஆகியோர் உத்தரவிட்டனர். முன்னதாக இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தான் கடந்த 108 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளதாகவும் சந்திரா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications