ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு புழங்குவதாக புகார்- ம.பி. போலீஸ் விசாரணை
போபால்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு புழக்கத்தில் இருப்பதாக கூறி வந்த புகாரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில்தான் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் செளகான் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ராகுல் பெயரிலும் ஒரு போலியான பேஸ்புக் கணக்கு இருப்பதாக ம.பி. போலீஸாருக்குப் புகார் வந்துள்ளது.
இதுகுறித்து மாநில சைபர் குற்றப் பிரிவு போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. போபால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் சதுர்வேதியும் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த கம்ப்யூட்டரிலிருந்து இந்த பேஸ் புக் கணக்கு இயக்கப்படுகிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவரத்தை சேகரித்த பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு விவரங்களை அனுப்பி அந்தக் கணக்கை முடக்க கோரிக்கை விடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications