ரூ 20 ஆயிரத்தைத் தொடும் தங்கம்!

சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக தங்கம் விலை கடந்த சில தினங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
கட்டுப்படுத்த முடியாத வகையில் விலை ஏற்றம் உள்ளது. ஆடிபெருக்கான கடந்த 3-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுனுக்கு முதல் முறையாக ரூ.18 ஆயிரத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து விலை ஏற்றமாகவே இருந்தது.
நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ரூ.19 ஆயிரத்தை தாண்டியது. ஒரு பவுனுக்கு ரூ.744 அதிகரித்து ரூ.19 ஆயிரத்து 500 ரூபாயை அன்று தொட்டது.
நேற்று காலையில் ஒரு பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஆனால் மாலையில் அதிலும் மாற்றம். நேற்று ஒரு பவுனுக்கு ரூ.88 குறைந்து ஒரு கிராம் ரூ.2,432 ஆகவும், ஒரு பவுன் ரூ.19,472 ஆகவும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,479 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19,832-க்கு விற்கப்பட்டது. இது நேற்றையை விலையை விட ரூ.360 கூடுதலாகும்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருப்பதால் ரூ.20 ஆயிரத்தை எந்த நேரத்திலும் தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் இந்த அபரிமிதமான விலை உயர்வு நிலத்தின் மதிப்பைக் கூட வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications