மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்கள் மூவர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கல்லூரி விழாவிற்கான பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இங்கு நடக்க உள்ள கல்லூரி விழாவிற்கான விளம்பர பலகை வைக்கும் பணியில், சில மாணவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, விளம்பர பலகை அருகில் இருந்த மின் கம்பியில் உரசியது. இதில் விளம்பர பலகையை தூக்கி சென்ற, தேனியை சேர்ந்த நந்தகுமார், சேலத்தை சேர்ந்த வேலுமணி, கோபியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரையும், அருகில் இருந்த மற்ற மாணவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications