சோனியா மீது சட்டசபையில் விமர்சனம்! - தங்கபாலு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் பற்றி சம்பந்தம் இல்லாமல் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது, என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே வி தங்கபாலு கூறினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "தமிழக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் பற்றி சம்பந்தம் இல்லாமல் விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பாராட்டுக்குரியது.

காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்காக பாடுபட்டு எத்தனையோ சோதனைகளையும், வேதனைகளையும், விமர்சனங்களையும் தாங்கிய கட்சி. தற்போது இந்தியாவின் முதன்மையான கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதை விமர்சனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் நடந்து வரும் அனைத்து திட்டங்களிலும் மத்திய அரசின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் சட்ட விதிமுறைப்படி மத்திய அரசு நிதியை வழங்கி வருகிறது.

தமிழக முதல்வர் சமீபத்தில் டெல்லி சென்ற போது மத்திய திட்டக்குழு எதிர்பார்த்ததை விட தமிழக அரசுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி அதிக அளவில் ஒதுக்கியது. முதல்வர் அளித்த பேட்டியில் கூட நிதி ஒதுக்கீடு பற்றி திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்து இருந்தார்.

தற்போது தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யவில்லை என்று அவர் கூறுவது சரியல்ல. தேவைகளை மத்திய அரசிடம் முறைப்படி எடுத்து வைத்தால் நிச்சயம் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். தேவையானவற்றை பெற தமிழ்நாடு காங்கிரசும் உறுதுணையாக இருக்கும்.

ராஜீவ் கொலையாளிகள் மனு நிராகரிப்பு வரவேற்புக்குரியது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பதை வரவேற்கிறோம். ராஜீவ் காந்தியை கொலை செய்த கொலையாளிகளை தப்ப விடக்கூடாது. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. ராஜபக்சே தம்பி கோதபய ராஜபக்சேயை கண்டிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன்.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று நானும் வற்புறுத்தி இருக்கிறேன்.

இலங்கையில் சீனா நாட்டின் ஆதிக்கம் உள்ளது. அதன்மூலம் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இலங்கையுடன் மத்திய அரசு நட்பு ரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. என்றாலும் இலங்கை தமிழரின் நலனில் இந்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+