திமுக தலைவர் கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் திடீர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

ஜெயந்தி நடராஜன் சமீபத்தில் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில் சென்னை வந்த அவர் இன்று கருணாநிதியை சந்தித்துப் பேசினார். மரியாதைநிமித்தமான சந்திப்பு இது என்று அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது ஜெயந்தி கூறுகையில்,
மாநிலங்களின் அனைத்து வரி வருமானத்தையும் மத்திய அரசு வாங்கிக் கொள்கிறது. இதனால் மாநில திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அவர்.
தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதாக சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications