பிரதமர் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை: அன்னா குழு குற்றச்சாட்டு

பிரதமர் மன்மோகன் சிங் தனது சுதந்திர தின உரையில், நமது நீதித்துறையை வலுவாக்காமல் நம்மால் ஊழலை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. உயர் மட்ட அளவில் ஊழலை ஒழிக்க கடுமையான, வலுவான லோக்பால் சட்டம் தேவை.
அதற்காக பட்டினி கிடப்பது, சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது ஊழலை ஒழிக்க உதவாது. இந்தியாவின் நீதித்துறையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இதற்குத் தான் அன்னா குழுவினர் பிரதமரின் பேச்சு அறிவுப்பூர்வமாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று அன்னா குழுவில் ஒருவரான கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பிடிஐக்கு கூறியதாவது,
பிரதமர் இறுதி நடுவர் போன்று பேசுகிறார். நீங்கள் போராட்டம் எல்லாம் நடத்தக் கூடாது என்கிறார். இது மக்களின் விருப்பத்திற்கு எதிராக லோக்பால் மசோதாவை அவர்கள் மீது திணிப்பது போன்றதாகும். லோக்பால் மசோதாவை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது தவறு என்கிறார்.
மக்களின் கருத்துகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் நிராகரித்துள்ளதாகக் கணக்கெடுப்புகளும், வாக்கெடுப்புகளும் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.
ஹஸாரே எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற காரணத்தை பிரதமர் தெரிவிக்கவில்லை. ஒரு போலியான மசோதாவை எதிர்த்து தான் இந்த போராட்டம். அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் மசோதாவுக்கு பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதை பிரதமர் தெரிவிக்கவில்லை என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications