தமிழக மீனவர்களை தாக்கி, வலைகள் சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடித்த ரமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விட்டு, அவர்கள் பிடித்த மீன்களை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றுவிட்டதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், கடந்த 13ம் தேதி, 600க்கும் மேற்பட்ட படகுகளில், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தோம்.

அப்போது அப்பகுதில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் மிரட்டி, அங்கிருந்து துரத்தினர். மேலும் 10க்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட மீன்களை எடுத்து சென்றுவிட்டனர்.

மீன்களை பிடிக்கும் வலைகளை அறுத்து, கடலுக்குள் போட்டுவிட்டு, இதை தட்டிக் கேட்ட சில மீனவர்களை தாக்கினர். இதனால், அப்பகுதியில் மீன் பிடிக்க முடியாமல் கரையை நோக்கி திரும்பிவி்ட்டோம். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நஷ்டத்தை அடைந்துள்ளோம்.

இவ்வாறு ராமேஸ்வரம் மீனவர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+