இராக்கில் 42 இடங்களில் குண்டுவெடிப்புகள்!-80க்கும் அதிமானோர் பலி!!
பாக்தாத்: இராக் நாட்டில் நேற்று நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த கார் குண்டு வெடிப்புகள், சாலையோர குண்டு வெடிப்புகள், தற்கொலை தாக்குதல்களில் 80க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
அந்த நாட்டில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின் நடந்துள்ள மிகப் பெரிய தொடர் தாக்குதல் இது தான்.
பாக்தாதின் மையப் பகுதியில் உள்ள குட் என்ற மார்க்கெட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றும், சாலையோரத்தில் கிடந்த குண்டு ஒன்றும் ஒரே நேரத்தில் வெடித்தன. இதில் 35 பேர் பலியாயினர். 64 பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவார்கள்.
இதுதவிர பக்பா நகரில் ராணுவ சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியாயினர். அதே நகரில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
கிர்குக் நகரிலும், நஜப், கர்பாலா ஆகிய நகரங்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் பலியானார்கள்.
மொத்தத்தில் நாடு முழுவதும் 42 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்தன. இதில் 80க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தத் தாக்குதல்களை அல்-கொய்தா தான் திட்டமிட்டு நடத்தியுள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ கருதுகிறது.












Click it and Unblock the Notifications