அன்னா ஹஸாரேவை சந்திக்கிறார் பாபா ராம்தேவ்- உண்ணாவிரதத்தில் குதிக்கிறார்
டெல்லி: அன்னா ஹஸாரேவை சிறையில் சந்திக்க பாபா ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். அதேபோல குடியரசுத் தலைவரையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், அன்னாவுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர் குதிக்கிறார்.
ஏற்கனவே டெல்லியில் ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தவர். அப்போது போலீஸார் வலுக்கட்டாயமாக ராம்தேவை கைது செய்து டெல்லியை விட்டு வெளியேற்றினர். ராம்லீலா மைதானத்தில் நடந்த அந்தப் போராட்டத்தின்போது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அன்னா கைது செய்யப்பட்டுள்ளதற்கு ராம்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தானும் அன்னாவுடன் இணைந்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இன்று அன்னாவை திஹார் சிறையில் சந்திக்க ராம்தேவ் திட்டமிட்டுள்ளார். அதேபோல குடியரசுத் தலைவரையும் நேரில் சந்தித்து மத்திய அரசு மீது புகார் கூறத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் ராம்தேவ் டெல்லிக்குள் நுழைய டெல்லி போலீஸாரும், மத்திய உள்துறையும் அனுமதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ராம்தேவும் போராட்டக்களத்திற்குள் நுழைவதால் டெல்லி நிலைமை மேலும் சூடாகியுள்ளது.












Click it and Unblock the Notifications