கிரண் பேடி, சாந்தி பூஷன் திஹாரில் இருந்து விடுதலை
டெல்லி: ஜேபி நரைன் பூங்காவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருந்த கிரண் பேடி காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார்.
அன்னா ஹஸாரே தலைமையிலான குழு நேற்று டெல்லி ஜேபி நரைன் பூங்காவில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தது. ஆனால் அதற்கு முன்பாகவே அன்னா ஹஸாரே, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அன்னா, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் ஆகியோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த திஹார் சிறையில் டைரக்டர் ஜெனரலாக இருந்தாரோ அதே சிறையில் அடைக்கப்பட்டார் கிரண் பேடி.
அன்னா ஹஸாரே கைது செய்யப்பட்டதையடுத்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் சிறையை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே உள்ளார் அன்னா.
கைதானவர்களில் கிரண் பேடி, சாந்தி பூஷன் ஆகியோர் நேற்று மாலை 7 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தான் கிரண் பேடியைக் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications