பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்கக் கோரி 19ம் தேதி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய கோரி, ஆகஸ்ட் 19ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். 20 ஆண்டுகள் என்பது ஆயுள் தண்டனையைவிட அதிகம்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்த கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் பரவியுள்ளது. உலக அளவில் மரண தண்டனையே கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மரண தண்டனையை நிறைவேற்ற தீவிரம் காட்டுவது வியப்பாக உள்ளது.
ஒரு பேட்டரி வாங்க உதவி செய்தக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் என்ற தமிழக இளைஞரையும் தூக்கிலிடுவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை வலுப்படுத்துவதாக அமைகிறது.
இந்த மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நீக்கி, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 19 ம் தேதி தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
காட்டுமன்னார்கோவிலில் வாபஸ் பெற்றதற்கு திமுக அழுத்தம் காரணமா.. ஆதவ் புகாருக்கு திருமாவளவன் பதில் -
நான் காங்கிரஸ்காரன்! என்னை எப்படி திருமாவளவன்.. காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணி! -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications