ஈழ விவகாரம் குறித்து காங். எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் திடீர் கூட்டம்-எம்.பிக்களை குழப்ப முயற்சி?
டெல்லி: இந்திய, இலங்கை மீனவர்கள் உறவு மற்றும் பிரச்சினை குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் டெல்லியில் இன்று ஒரு கூட்டத்தைக் கூட்டியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்.இக்கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களை அவர் அழைத்துள்ளார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலை குறித்த விவாதம் ராஜ்யசபாவில் அடுத்த வாரம் வரும் நிலையில் சுதர்சன நாச்சியப்பன் கூட்டியுள்ள இக்கூட்டம் எம்.பிக்களை குழப்ப காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சியாக கருதப்படுகிறது.
டெல்லியில் இருந்தபடி இயங்கி வரும் உலகளாவிய வளர்ச்சிக்கான மனித உரிமைக்கான எம்.பிக்கள் அமைப்பு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சுதர்சன நாச்சியப்பன். இக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களை மட்டும் இலங்கைக்கு அழைத்துச் சென்று கூட்டி வந்தது நினைவிருக்கலாம். அந்தக் கூட்டத்தில் சுதர்சன நாச்சியப்பனும் ஒருவராக இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஐயைச் சேர்ந்த எம்.பி அப்பாத்துரை உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தக் கூட்டம் இலங்கையின் ரகசிய ஆதரவுடன் நடைபெறும் கூட்டம் என்ற சந்தேகம் இருப்பதால் டி.ராஜா கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
மேலும் இந்தக் கூட்டம் தொடர்பாக தன்னை சந்தித்த எம்.பி. அப்பாத்துரையிடம் சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில், இலங்கையில் நடந்த தவறுக்கெல்லாம் விடுதலைப் புலிகள்தான் காரணம், இலங்கை அரசி்ன் சமரச முயற்சிகளுக்கு புலிகள்தான் தொடர்ந்து ஊறு விளைவித்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலிருந்து குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் பிரச்சினையை பெரிதுபடுத்தி விட்டனர். உண்மையில் பிரச்சினைகளுக்கு தமிழக அரசியல்வாதிகள்தான் காரணம் என்று கூறினாராம் நாச்சியப்பன். மேலும் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தான் கருதவில்லை என்றும் நாச்சியப்பன் தெரிவித்தாராம்.
இதன் மூலம், இன்றைய கூட்டத்தின் மூலம் ஈழப் பிரச்சினை குறித்த எம்.பிக்களின் கருத்தை குழப்ப காங்கிரஸ் கட்சி ரகசியத் திட்டம் தீட்டியுள்ளது தெளிவாகிறது என்று ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications