2010ல் தீவிரவாதத்திற்குப் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை குறைவு: அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியா மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்தாண்டு இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் தீவிரவாதம் குறித்த அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
இதில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் காஷ்மீர் மீது பாகிஸ்தானின் எல்லை தாண்டும் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்தாண்டு இதில், பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் என 1,900 பேர் பலியாகினர். இதன்மூலம் உலகில் தீவிரவாத அச்சுறுதல் அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
ஆனால், கடந்தாண்டு உலக நாடுகளோடு சேர்ந்து தீவிரவாதத்தை எதிர்க்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளால், தீவிரவாத தாக்குதல்களில் இறப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது.
மும்பை தாக்குதலில் சிக்கிய தீவிரவாதி அஜ்மல் கசாப்பிற்கு கடந்த மே மாதம், மரணத் தண்டனை விதித்தது. மேலும் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளில் திறன்பட செயல்பட்டதால், தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டன.
பாகிஸ்தான் எல்லை உள்பட நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ள இந்தியா, அதிகளவிலான தீவிரவாதிகளை கைது செய்துள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications