மணல் அள்ளுவதை கண்காணிக்க நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிட்டி நியமனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிட்டி அமைக்க மதுரை உயர்நீதி்மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கானூரை சேர்ந்த உலகநாதன் என்பவர், தேனி அருகே வைகை ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்கிய ஆர்.டி.ஒ. உத்தரவை ரத்து செய்ய கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, விருதுநகர், தேனி மாவட்ட ஆறுகளில் மணல் அள்ள தடை கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்குகளின் விசாரணையின் போது, மணல் அள்ளுவதை கண்காணிக்க கமிட்டி அமைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில கண்காணிப்பு கமிட்டி நியமித்தது குறித்து அரசு கூடுதல் அட்வகேட் ஜெரனல் செல்லப்பாண்டியன் அறிக்கை சமர்ப்பித்தார். மணல் அள்ளுவதை கண்காணிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின்படி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் கமிட்டியை அரசு நியமித்துள்ளது.

மனுதாரர்கள் தங்களை குறைகளை இந்த கமிட்டியிடம் தெரிவிக்கலாம். அதன்மீது கமிட்டி நடவடிக்கை எடுக்கும். கமிட்டிக்கு தேவையான ஊழியர்கள், வசதிகளை முதன்மை செயலாளர் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+