தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

பள்ளிபாளையம்: என்னைத் தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல் இரவில் கணவரை மிரட்டிய புது மணப்பெண் மாயமாகியுள்ளார். அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.

வெடியரசம்பாளையம் சிவக்குமார்

பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (28). தறி தொழிலாளி. அவர் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த பைரவி (23) என்ற பெண்ணை பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். முதலிரவும் வந்தது. ஆசையுடன் மனைவியை நெருங்கிய சிவக்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பைரவி மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி தாலியைக் கழற்றி வைத்துவிட்டு திடீரென அவர் மாயமாகிவிட்டார்.

மனைவியைத் தேடி அலைந்த சிவக்குமார் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பைரவிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி திருமணம் நடந்தது. முதல் இரவில் நான் பைரவியிடம் பேச்சு கொடுத்த போது அவர் என்னை தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

நான் முதலில் இப்படித்தான் இருக்கும் போக, போக சரியாகி விடும் என்று நினைத்து வழக்கம் போல் தினமும் வேலைக்கு சென்று வந்தேன். பைரவியிடம் அன்பாக பழகினேன். ஜூன் மாதம் 30-ம் தேதி வழக்கம் போல் நான் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினேன். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பைரவியைக் காணவில்லை. நான் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

கடந்த 2 மாதமாக அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, அவரை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+