அக்டோபரில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்- தேர்தல் ஆணையம் உத்தரவு
கரூர்: வரும் அக்டோபர் மாதத்தில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்களை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், அக்டோபர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
அன்று முதல் நவம்பர் முதல் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், முகவரி மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக, அக்டோபர் 9,16,23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்த முகாம்களில் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் பணிக்காக அரசியல் கட்சியினர் தங்களது முகவர்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாற்றம் செய்ய வேண்டுவோர், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், இறந்து போன வாக்காளர் பெயர் நீக்குதல் உள்ளிட்ட தேவைகள் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம்.












Click it and Unblock the Notifications