சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை
சுரண்டை: சுரண்டை அருகே வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் சுருட்டிய பாதிரியார் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தவர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பெரியகுளம் கணவாய்மடை அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்குள்ள அமலை செடிகள் புதருக்குள் இருந்த பிணத்தை மீ்ட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்திருந்தார். இறந்தவரின் முகம், கை, கால்களில் இருந்த காயங்களில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடையநல்லூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஜெயம்பார்னபாஸ் என்பது தெரிய வந்தது. ஜெயம்பார்னபாஸ் கடையநல்லூர், சுரண்டை, சிங்கை போன்ற பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்களிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், வேலைவாய்ப்பு அதிகாரிகளை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், பணம் தந்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அவர் பேச்சை நம்பிய சிலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. சிங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி் ரூ.3. 5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதே போல் பலரிடம் அவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் பணம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஜெயம்பார்னபாஸால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை காரி்ல் கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சிங்கையைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications