வட தமிழகம் முழுவதும் இடியுடன் பலத்த மழை-மேலும் நீடிக்கும்
சென்னை தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை இரவு முழுவதும் பெய்தது. கடல் சீற்றமும் காணப்படுகிறது.
தமிழகத்தின் வட பகுதியில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் கனத்த மழை பெய்துள்ளது.
பல பகுதிகளில் விடிய விடிய இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக குறுவை சாகுபடி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதிகபட்சமாக செம்பரம்பாக்கத்தில் 10 செமீ மழையும், சோழவரம், பள்ளிப்பட்டில் 8 செமீ மழையும் பதிவானது.
இந்த மழை காரணமாக சென்னை நகரின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.
கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பும் காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் கடலுக்குப் போகவில்லை.
வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாகவும், மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது












Click it and Unblock the Notifications